Pages

Wednesday, 16 May 2012

மொட்டை மாடியில் தினமும் வானம் பார்க்கிறேன்  பேர்வழி என்று உட்கார்ந்து

  கொள்வது எதற்காக? இருட்டில் நான் உட்கார்ந்திருப்பது  ஒரு பய

 பிள்ளைக்கும் தெரியாது. அவனவன்  என்னமா லைட்டை  போட்டுக்கிட்டு

  ரொமான்ஸ   பண்றாய்ங்க. பெண்கள் இப்படியா  ஜன்னலைத் திறந்து

போட்டுக்கொண்டு  உடை மாற்றுவார்கள்!  பாதகத்திகள் !  (ஆமா. ஆக்சுவலா

 பாதகத்தினா என்ன? தமிழ் கூறும் நல்லுலகமே !அர்த்தம் சொல்லுங்கப்பா.

சின்னப் பெண்கள் கண்ணாடி முன்னால் அப்படியும் இப்படியும் அழகு

பார்ப்பதும் ... அடாடா. அடாடா.  எத்தனை  கோடி இன்பம் வைத்தாய் இறைவா!  . 
டென்னிஸ் பேட் போன்ற  வடிவுள்ள  கொசு அடிக்கும் கருவியை எவன் கண்டு பிடித்தவன்? சாயந்திர  வேளைகளில், இரவுகளில் அகால  2 மணிக்கு கூட  எதிர் வீட்டு அம்மா அதை வைத்து கொசுவை சுட்டுத்  தள்ளும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பட்பட் சட்சட்.  இது என்ன  விதமான உணர்வு? தன்  குழந்தையைக் கடிக்கும் கொசுவை சாகடிக்கும் ஒரு குரூரமான  திருப்தியும்  ஏகாந்தமும் அந்தம்மாவின்  முகத்தில். சில  சமயங்களில்  பயமாக  இருக்கிறது.   
மத்திய மாநில  அரசு மற்றும்  தனியார் துறைகள் எல்லாவற்றிலும் பெண்கள் சுடிதார் அணியும் வழக்கம் வந்து விட்டது. ஐ  டி  துறைகளில் மட்டுமல்ல,பேங்க். போஸ்ட் ஆபீஸ், கவர்மன்ட் ஆபீஸ்களிலும் பெண்கள் சுடிதார்  அணிந்து வருகிறார்கள். ஓடிப்போய் பேருந்தை பிடிக்க வசதியாகவும் உடல் முழுதும் மறைக்கக்கூடிய,   எளிய,   கண்ணியமான,   தன்னம்பிக்கை  அளிக்ககூடிய உடை சுடிதார். 

   எங்களை போன்ற  அரசுப் பள்ளிகளில் மட்டும் இன்னமும் சேலை கட்டும் சம்பிரதாயம் ஏன்? இந்த  ராமநாதபுர மாவட்டத்தில்  வெக்கை கொப்பளிக்கும் கிராமங்களில் எவ்வித வசதியும் இன்றி  அல்லல்படும் எங்களைப்போன்ற ஆசிரியர்களை  கருத்தில் கொண்டு பெண்ணினத்தின் கஷ்டங்களை புரிந்துகொள்ளும் அன்னை முதலமைச்சர் ஜெயலலிதா ஆசிரியர்களும் சுடிதார் அணிய  அனுமதி   வழங்கக் கூடாதா? பெண்ணினமே உங்களை வாழ்த்தி வணங்கும்.  
பின்னிரவில் செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வெறும் லுங்கியோடு

 விசிலடித்துக்கொண்டு வர முடிகிறது. ரோட்டோர வளைவுகளில் குட்டி

சுவர்களில்  வரிசையாக உட்கார்ந்து கொண்டு சத்தமாக பேசி சிரிக்க முடிகிறது.

(என்னதான் அப்படி விடிய விடிய பேசுவாங்களோ?) இரவில் இரண்டு மணிக்கு

படுக்கவும் காலை 11 மணிக்கு எழவும் முடிகிறது, நண்பர்களின் திருமணம்

என்று  வெளியூர்களுக்கு செல்லவும் சில  நாட்கள் அங்கேயே தங்கவும் மறு

பேச்சின்றி அனுமதி கிடைக்கிறது. உணவுகளில் பிடிக்கும் பிடிக்காது என்று

தெளிவான   முடிவுகளை தக்க வைத்துக்கொள்ள  முடிகிறது. ம்ம்ம். ஆண்கள். 
  யார் இந்த  ராஜு  முருகன்? ஆனந்த விகடனில்  வட்டியும்  முதலும் எழுதுபவன் 
யார்? (அவன் இவன் என்ற  ஏக வசனம் வேண்டாமோ?) எப்படி நம் மனதில் புகுந்து கொண்டு நாம் நினைப்பதை எல்லாம் இந்த ஆள் எழுதுகிறான். என்ன  கொடும   சார் இது? நேத்து அண்ணன் கிட்ட போன்ல  பேசும்போது யார்ல இவன்? என்றேன். தெரியல  மக்கா. நம்ம  பேசுதது எல்லாம்  இவனுக்கு எப்பிடில  தெரியுது என்றான், கிரேட் பீப்பிள்  திங்க் அலைக்  என்றேன். மக்கா நம்மல்லாம் கிரேட் பீப்பிலா என்றான்.இல்லையா பின்னே?