Pages

Sunday, 1 April 2012

சுவர்க்கம் 

வாரத்தின் ஏழு நாளும் 
வாழ வேண்டுமா? 

அன்பு செய்.

மனைவியின் கால்நகம் 
கடித்துத் துப்பு,

குழந்தையைக் குளிப்பாட்டு,
செடியிடம் பேசு, 

அம்மாவின் முந்தானை நுகர்ந்து 
பால் வாசம் இன்றுணர்,

தோழியிடம் தோற்றுப் போ
,
கண்களால் பேசு

புன்னகையால் பார்

மனம் திறந்து வை,

சத்தமாகச் சிரி
,
கண்ணீர் வழிய இசை கேள்,

அணைத்துக்கொள்

அணைக்கவிடு,

சுவர்க்கம் வானில் இல்லை,

இன்னுமா புரியவில்லை?