சுவர்க்கம்
வாரத்தின் ஏழு நாளும்
வாழ வேண்டுமா?
அன்பு செய்.
மனைவியின் கால்நகம்
கடித்துத் துப்பு,
குழந்தையைக் குளிப்பாட்டு,
செடியிடம் பேசு,
அம்மாவின் முந்தானை நுகர்ந்து
பால் வாசம் இன்றுணர்,
தோழியிடம் தோற்றுப் போ
,
கண்களால் பேசு
புன்னகையால் பார்
மனம் திறந்து வை,
சத்தமாகச் சிரி
,
கண்ணீர் வழிய இசை கேள்,
அணைத்துக்கொள்
அணைக்கவிடு,
சுவர்க்கம் வானில் இல்லை,
இன்னுமா புரியவில்லை?
No comments:
Post a Comment