Pages

Tuesday, 27 March 2012

காட்டு பூவாய்
அலட்சியமாகவும்,

மலையருவியாய்
ஆர்ப்பரித்தும்


கடல் மழையாய் 
திமிருடனும்,


 தீவு நிலவாய்
 சலனமில்லாமலும்,
சுற்றித் திரிந்தேன்.

உன் மயக்கும் விழிகளும்
மோகச் சிரிப்பும்
என் திமிரை அடக்கித்
தீக்கனலில் இட்டன.

காட்டுத் தீ.
எரியும் காடு பற்றி.

அமைதியாய் கிடந்த
கிணற்று நீரில்
கல்லெறிந்து விட்டாய்.
அதிர்வலைகள் இல்லாமல்
இருக்குமா?

என் கருப்பு வெள்ளை வாழ்க்கையில்
என்ன வர்ணம் தீட்ட வந்தாய்?

கண் தொடும்
உறவு சில.
இதழ் சிரிக்கும்
உறவு சில.
கை குலுக்கும் சில.
தோள் அணைக்கும் சில.
மனம் சேரும்
உடல் சேரும் உறவு சில.

நான் உன் உயிர் தீண்டுவேன்.
உன் ஆன்மாவின் உள் உறைவேன்.


என் உயிர்  இனிப்பை 
உனக்கு உணர்த்துவேன்.





என்னிடம் பல குறைகள்.
என்ன சொல்லி என்ன பயன்?
கண்ணாடி நான்.
உடைப்பதே அனைவர் விருப்பம்.
யார் அதை முத்தமிட்டு பாதுகாப்பார்?