Pages

Tuesday, 27 March 2012

அமைதியாய் கிடந்த
கிணற்று நீரில்
கல்லெறிந்து விட்டாய்.
அதிர்வலைகள் இல்லாமல்
இருக்குமா?

என் கருப்பு வெள்ளை வாழ்க்கையில்
என்ன வர்ணம் தீட்ட வந்தாய்?

கண் தொடும்
உறவு சில.
இதழ் சிரிக்கும்
உறவு சில.
கை குலுக்கும் சில.
தோள் அணைக்கும் சில.
மனம் சேரும்
உடல் சேரும் உறவு சில.

நான் உன் உயிர் தீண்டுவேன்.
உன் ஆன்மாவின் உள் உறைவேன்.


என் உயிர்  இனிப்பை 
உனக்கு உணர்த்துவேன்.





No comments:

Post a Comment